இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் – மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 312 இடங்களில் பெருநகர காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் உயிரிழக்கும் நிகழ்வுகள் நடந்திருக்கும் நிலையில், தலைக்கவசம் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.