விஜய் பிறந்தநாள்.. ஒரு மாதத்திற்கு முன்பே நலத்திட்ட உதவிகளை தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார், அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

நடிகர் விஜய் வரும் ஜூன் 22 ஆம் தேதி தனது 48 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, நேற்று புதுச்சேரி மாநில விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு இடங்களில் 9 புதிய மக்கள் இயக்க பெயற்பலகையை அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து திறந்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டுதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

image

முதற்கட்டமாக, புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதி தலைவர் வசந்த் மேற்பார்வையில் செல்வா மணிகண்டன் ஏற்பாட்டில் 2 புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அரியங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி தலைமையில் 200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் 500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி 300 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், 20 விவசாயிகளுக்கு உர மூட்டைகள் மற்றும்
300 குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு 3 கிலோ அரிசி, 100 நபர்களுக்கு பிளாஸ்டிக் வாலி, 300 நபர்க்கு பிளாஸ்டிக் குடம் மற்றும் நீர்மோர் மக்களுக்கு வழங்கப்பட்டது.

image

அதன்பின், இரண்டாம் கட்டமாக மணவெளி தொகுதி இளைஞர் அணி தலைவர் வசந்த் மேற்பார்வையில பிரசாத் ஏற்பாட்டில் புதிய பெயர் பலகை திறக்கப்பட்டு 200 பெண்களுக்கு புடவை, 300 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி, 800 மாணவ மாணவிகளுக்கு நோட்புக், பென்சில் பேனா வழங்கப்பட்டது.

image

அதன்பின் மூன்றாம் கட்டமாக, ஏம்பலம் தொகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 700 ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி, 700 பெண்களுக்கு புடவை, 700 நபர்களுக்கு வேட்டி, 700 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சிலும்,

ஏம்பலம் தொகுதி தலைவர் மணிகண்டன் மற்றும் இளைஞரணி தலைவர் மதன் முன்னிலையில் மணி ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 350 ஏழை எளிய மக்களுக்கு புடவை, 500 நபர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, 400 மாணவ மாணவிகளுக்கு நோட்புக், பேனா,பென்சில ஸ்கேல், ரப்பர் மற்றும் 300 பொது மக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.

image

நான்கம் கட்டமாக, திருபுவனை தொகுதி இளைஞரணி தலைவர் ராஜா மேற்பார்வையில் மணிகண்டன் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 200 ஏழை எளிய மக்களுக்கு புடவை, 250 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சில், 200 பொது மக்களுக்கு மதிய உணவும், தமிழரசன் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 20 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சில், 50 பொது மக்களுக்கு மதிய உணவும், ஜெயக்குமார் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 200 பெண்களுக்கு புடவை, 500 பொதுமக்களுக்கு மதிய உணவு, 250 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட் புக் வழங்கப்பட்டன.

மேலும், அசோக் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு, அப்பகுதியைச் சேர்ந்த 100 ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள், 200 புடவை, 250 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சில், 250 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாக்ஸ், 300 பொது மக்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.

image

இவ்விழாவில் தொகுதி தலைவர்கள் முதலியார்பேட்டை மணிபாலன், ராஜ்பவன் பிரதீபன், உழவர்கரை ராஜசேகர், திருபுவனை கிருஷ்ணா, கதிர்காமம் வேல்முருகன் இளைஞரணி தலைவர்கள் கதிர்காமம் அருள்பாண்டி, வில்லியனூர் சுகுமார், நிர்வாகிகள் உழவர்கரை நிரேஷ், உருளையன்பேட்டை பிரபு, நாகராஜ், அரியாங்குப்பம் ரவி பிரவீன் மணவெலி சந்தோஷ், திருபுவனை பாபு கார்த்திக் ஆனந்தராஜ் மற்றும் திரளான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.