ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்



லக்னோ: உ.பி., ஹரியானாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

latest tamil news

உ.பி., ஹரியானா மற்றும் டில்லியில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு அடைந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அம்மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

latest tamil news

இந்நிலையில் சண்டிகர் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹரியானா, உ.பி., மற்றும் குருகிராமில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழை தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் ஹரியானா, உ.பி., மற்றும் குருகிராமில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.