செய்வினை வைத்து மாடுகளைக் கொன்றதாகக் கூறி அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தம்பி.. தடுக்க வந்த அண்ணிக்கும் சரமாரி அரிவாள் வெட்டு..!

தருமபுரி அருகே மாடுகளை செய்வினை வைத்து சாகடித்ததாகக் கூறி, அண்ணனை கொலை செய்த தம்பி, தடுக்க வந்த அண்ணியையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.

சக்கிலி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனும் குமாரும் அண்ணன் தம்பிகள். குமார் வளர்த்து வந்த இரண்டு மாடுகள் ஒரு வாரத்துக்கு முன் எதிர்பாராதவிதமாக இறந்துபோயின.

அண்ணன் வெங்கடேசன்தான் செய்வினை வைத்து தனது மாடுகளை கொன்றுவிட்டதாக தகராறு செய்த குமார், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியிருக்கிறான்.

இதில் ரத்தவெள்ளத்தில் வெங்கடேசன் உயிரிழந்த நிலையில், தடுக்க வந்த தனது அண்ணியையும் குமார் அரிவாளால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்தார். தப்பியோடிய குமாரை போலீசார் தேடி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.