விசா வாங்கித்தர லஞ்சம் – ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு மேலும் 3 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு

சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வாங்கி தருவதற்கு, ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்ற விவகாரத்தில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு மேலும் மூன்று நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010- 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மத்திய அமைச்சராக ப. சிதம்பரம் இருந்த பொழுது, அவரது மகன் கார்த்திக் சிதம்பரம், சீன நாட்டைச் சேர்ந்த 263 பேருக்கு பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில், மின் திட்டப் பணிகளுக்காக சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சென்னையில் சிபிஐ கைது செய்தது. இதையடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாஸ்கர் ராமனுக்கு நான்கு நாட்கள் சிபிஐ காவல் வழங்கி கடந்த 19-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. 
இதையடுத்து முன்னதாக வழங்கப்பட்ட காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை டெல்லி ரோஸ் அவனிவ் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று மீண்டும் ஆஜர் படுத்தினர்.
image
இதையடுத்து மேலும் மூன்று நாட்கள் பாஸ்கர் ராமனுக்கு சிபிஐ காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் முன்னதாக இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மருத்த நிலையில், அவர் வெளிநாட்டில் இருந்து திரும்ப வந்தவுடன் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.