ராஜ்யசபாவில் மீண்டும் பயோமெட்ரிக்| Dinamalar

புதுடில்லி,-ராஜ்யசபா அலுவலகத்தில் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு துவக்கப்படுகிறது.

ராஜ்யசபா அலுவலகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள், உதவியாளர்கள் என 1,300 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 201ல் பயோமெட்ரிக் வருகை பதிவு அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் மாதத்தில் இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் பழைய முறை பின்பற்றப்பட்டது.இந்நிலையில், மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவு ஜூன் 1ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன், பரிசோதனை முயற்சியாக நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.