12 ஆண்டுகளுக்கு பிறகு.. மதுரை – தேனி இடையே மீண்டும் ரயில் சேவை.!

ரயில்வே துறை சார்பில் மதுரை-தேனி இடையே முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து மே 27-ம் தேதி முதல் தொடங்குகிறது.

மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2011-ல் தொடங்கியது. தற்போது மதுரை – தேனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில், சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், மதுரை-தேனி இடையே மே 27-ம் தேதி முதல் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக காலை 9.35 மணிக்கு தேனி ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.

அதே போல, தேனி ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி வழியாக மாலை 7.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.