புதுடில்லி: ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அலுவல் மொழியான ஹிந்தியில் பணிபுரியும் அறிவைப் பெற்றுள்ளனர்’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பார்லிமென்ட் அலுவல் மொழிக்குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘ ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும். இரண்டு வெவ்வேறு மொழிகள் பேசும் குடிமக்கள் சந்திக்கும்போது அவர்கள் ஹிந்தியில் உரையாட வேண்டும்’ என கூறினார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ‘உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அலுவல் மொழியான ஹிந்தியில் பணிபுரியும் அறிவைப் பெற்றுள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி: ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அலுவல் மொழியான ஹிந்தியில் பணிபுரியும் அறிவைப்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.