இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய்; டீசல் 400 ரூபாய்!| Dinamalar

கொழும்பு : இலங்கையில், அந்நாட்டு ரூபாய் மதிப்பில், ஒரு லிட்டர் பெட்ரோல், 420 ரூபாய்; டீசல், 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இலங்கை அரசு இன்று (மே 24), பெட்ரோல், டீசல் விலையை முறையே, 24 சதவீதம் மற்றும் 38 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 82 ரூபாயும், டீசலுக்கு, 111 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்.,19க்குப் பின் இரண்டாவது முறையாக பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது வரலாறு காணாத விலை உயர்வாகும்.

இதன்படி இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல், 420 ரூபாய்; டீசல், 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை இந்திய ரூபாயில் மதிப்பிட்டால், ஒரு லிட்டர் பெட்ரோல், 90 ரூபாயாகவும்; டீசல், 85 ரூபாயாகவும் இருக்கும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.