அமைச்சர் வீட்டுக்கு தீ ஆந்திராவில் பதற்றம்| Dinamalar

அமலாபுரம், : ஆந்திராவில் கோனசீமா மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் அமைச்சரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. .

இங்கு, கோனசீமா மாவட்டத்தின் பெயரை ‘டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம்’ என மாற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி ஆகிய அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வந்தன.இந்நிலையில், அமலாபுரத்தில் உள்ள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் விஷ்வரூப் வீட்டு முன் நேற்று ஏராளமானோர் திரண்டு கல்வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது திடீரென அமைச்சரின் வீடு தீப்பற்றி எரிந்தது. இதற்கு அங்கிருந்த ‘காஸ்’ சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக ஆளுங்கட்சியினர் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பகுதி போர்க்களம் போல மாறியது. ஒரு கல்லுாரி பேருந்து, ஒரு அரசுப் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. கலவரத்தில், டி.எஸ்.பி., உட்பட 20 போலீசாருக்கும், போராட்டக்காரர்களில் 40 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மாவட்டம் முழுதும் பதற்றம் நிலவுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.