சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை தவறவிட்ட பெற்றோர்.. சிசிடிவி உதவியுடன் 30 நிமிடத்தில் பத்திரமாக மீட்ட ரயில்வே போலீசார்..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோர் தவறவிட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை அரை மணி நேரத்தில் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வினோத் குமார் – லதா தம்பதி தங்களது குழந்தை ருத்விக் உடன் விசாகப்பட்டினம் செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

திடீரென குழந்தை காணாமல் போனதை அடுத்து, பெற்றோர் ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவியை அணுகினர்.

சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, குழந்தை நடைமேடைக்கு அருகில் நடந்து சென்றது தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.