மெக்சிகோவில் உணவகம், பார்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

மெக்சிகோவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் செலாயா பகுதியில் உள்ள உணவகம் மற்றும் மதுபான கேளிக்கை கூடத்தில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென கண்மூடித்தன தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 7 பெண்களும், 3 ஆண்களும் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.