போலீஸ்காரர் சுட்டுக் கொலை| Dinamalar

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து இருந்த போலீஸ்காரர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வசிப்பவர் சைபுல்லா குவாத்ரி. போலீஸ்காரரான இவர் நேற்று தன் மகளுடன் வீட்டுக்கு வெளியில் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது, பைக்குகளில் வந்த பயங்கரவாதிகள் இருவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். சைபுல்லா அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரது 7 வயது மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக, ஜம்மு – காஷ்மீரில் போலீஸ் மற்றும் பண்டிட்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.