ரூ.21 லட்சத்தை திருடிவிட்டு “ஐ லவ் யூ” என்று எழுதிச் சென்ற திருடர்கள்! கோவாவில் துணிகரம்!

கோவா மாநிலத்தில் திருடர்கள் ரூ. 21.5 லட்சத்தை திருடிவிட்டு, “ஐ லவ் யூ” என்று எழுதிச் சென்றதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கோவாவில் மார்கோவ் நகரில் வசித்து வந்தவர் ஆசிப் செக். இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தனது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மார்கோவ் நகர் ஆசிப் செக் போலீசில் புகார் அளித்தார்.
அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து, 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மொத்தமாக ரூ. 21.5 லட்சம் திருடு போயிருப்பதாக காவல்துறையிடம் ஆசிப் தெரிவித்துள்ளார்.
30+ Free Thieves & Thief Images
வீட்டில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று காவல்துறையினர் தேடிக் கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த தொலைக்காட்சியின் திரையில் ஒரு மார்க்கரைப் பயன்படுத்தி திருடர்கள் “ஐ லவ் யூ” என்று எழுதியிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதை பார்த்து வீட்டின் உரிமையாளர் ஆசிப் செக் அதிர்ச்சியடைந்தார்.
“அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வீடு புகுந்து திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்” என்று இன்ஸ்பெக்டர் சச்சின் நர்வேகர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.