இளம்பெண்ணைக் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கட்டையால் அடித்து கொலை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இளம்பெண்ணைக் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார்.

சின்னதாராபுரத்தைச் சேர்ந்த அரவிந்த், சூர்யா ஆகியோர், கடந்த திங்கட்கிழமை பக்கத்து ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு இளம்பெண் ஒருவரை சூர்யா கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

மறுநாள் சின்னதாராபுரம் வந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் அவரைக் கிண்டல் செய்தது குறித்து சூர்யாவிடம் கேட்டுள்ளனர். அப்போது அரவிந்தும் உடன் இருந்த நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி, பெண்ணின் உறவினர்கள் கட்டையால் தாக்கியதில் அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார்

சூர்யா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.