கிராமப் பெண் கண்டுபிடித்தரூ.10 லட்சம் வைரக் கல்

போபால்,-மத்திய பிரதேச சுரங்கத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கல்லை கிராமத்து பெண் கண்டெடுத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பன்னா மாவட்டத்தில் வைரச் சுரங்கங்கள் அதிகம் உள்ளன. இவற்றில், 12 லட்சம் காரட் வைரம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரவிந்த் சிங் என்ற விவசாயி, கிருஷ்ணா கல்யான்புர் பகுதியில் சிறிய சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அவர் மனைவி சமேலி பாய், அந்த சுரங்கத்தில் வைரத்தை தேடி வந்துள்ளார்.

அப்போது அவருக்கு ஒரு வைரக்கல் கிடைத்துள்ளது. உடனே அதை உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். இந்த வைரம் ஏலத்தில், 10 லட்சம் ரூபாய் வரை விலை போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு பின், வரிகள் போக மீதி தொகை சமேலி பாய்க்கு கிடைக்கும். அந்தப் பணத்தில் சிறிய வீடு வாங்க உள்ளதாக அரவிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.