3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

ஸ்ரீநகர்-ஜம்மு – காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார்

.ஜம்மு – காஷ்மீர் முழுதும் நேற்று பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். பாரமுல்லா மாவட்டத்தின் நஜிபாதில் அமைத்திருந்த சாவடியில் சோதனை நடத்திய போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்.கொல்லப்பட்ட மூவரும் பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் – இ – முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். தேடுதல் வேட்டை மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.