ஸ்ரீநகர்-ஜம்மு – காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார்
.ஜம்மு – காஷ்மீர் முழுதும் நேற்று பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். பாரமுல்லா மாவட்டத்தின் நஜிபாதில் அமைத்திருந்த சாவடியில் சோதனை நடத்திய போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்.கொல்லப்பட்ட மூவரும் பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் – இ – முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். தேடுதல் வேட்டை மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் கூறினர்.
ஸ்ரீநகர்-ஜம்மு – காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார்.ஜம்மு – காஷ்மீர் முழுதும் நேற்று பல இடங்களில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.