போலீஸ் துப்பாக்கிச் சூடு; பிரேசிலில் 28 பேர் பலி| Dinamalar

ரியோ டி ஜெனிரோ,-குற்றவாளிகளை பிடிக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது நடந்த, துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், பிற மாகாணங்களை சேர்ந்த கொள்ளையர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் ஏராளமானோர் பதுங்கியுள்ளனர். குற்ற வாளிகளைப் பிடிக்க நேற்று முன் தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 41 வயது பெண் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.அதிரடி சோதனை தொடர்ந்து நடக்கிறது. காயம் அடைந்தோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.