கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. சேவூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட கம்பம் நடுவதில் மோதல் ஏற்பட்டது. போலீசார் முன்னிலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.