ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4 குண்டு வெடிப்புகள்… 16 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்ளிட்ட 4 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் பலர் காயம் அடைந்தனர்.

ஷியா பிரிவினரை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மசூதியில் மாலை நேரத் தொழுகை நடந்த போது குண்டு வெடித்தது. இதே போல்  Mazar-i-Sharif நகரில் 3 மினி பேருந்துகளில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.தாஹேஷ் இயக்கத்தின் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.