#BigBreaking || பிரபல நகைசுவை நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.! அதிர்ச்சியில் திரையுலகம்.!

இதயக் கோளாறு காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் நடிகர் போண்டாமணி. இவருக்கு நேற்று இரவு திடீரென இதய கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதல் கட்டமாக கொரோனா நோய்த்தொற்று பரவல் இருக்கிறதா என்று செய்ததில், அவருக்கு நோய் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானவுடன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று மாலை நாளை காலைக்குள் அவரின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திடீரென நகைச்சுவை நடிகராக நடித்தவர் நடிகர் போண்டாமணி, இதயக் கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் பூரண நலத்துடன் திரும்பிவர வேண்டும் என்று பிராத்தனை செய்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.