சென்னை: பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை – நேரு உள்விளையாட்டு அரங்கங்களில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர். இன்னும் சற்று நேரத்தில் ஹெலிகாப்டர் வாயிலாக அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு செல்ல உள்ளார்.