"அந்தப் பையனுடைய குடும்பமே நக்‌ஷத்ராவை லாக் பண்ணி வச்சிருக்காங்க!"- வைரலாகும் ஶ்ரீநிதி பேசிய வீடியோ

சின்னத்திரையில் ‘யாரடி நீ மோகினி’ போன்ற தொடர்களில் நடித்திருந்தவர் ஶ்ரீநிதி. நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் (தற்காலிக லைவ் வீடியோ). அந்த வீடியோவில் அவருடைய தோழியும் தற்போது கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘வள்ளி திருமணம்’ தொடரில் நடித்துக் கொண்டிருப்பவருமான நக்‌ஷத்ரா குறித்து சில தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்.

ஶ்ரீநிதி – நக்‌ஷத்ரா

ஶ்ரீநிதியும், நக்‌ஷத்ராவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நக்‌ஷத்ரா, சயித்ரா, ஷபானா, ரேஷ்மா நால்வரும் நண்பர்களாக இருந்தாலும் நக்‌ஷத்ராவைத் தவிர்த்து மீதி மூன்று பேரும் திருமணமாகி பிஸியாகத் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நக்‌ஷத்ராவின் நெருங்கிய தோழியே அவருடைய திருமணம் குறித்து பேசியது சமூக வலைதள பக்கங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஶ்ரீநிதி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று லைவ் வீடியோ ஒன்றில் நக்‌ஷத்ரா குறித்து பேசவிருப்பதாக பதிவிட்டிருந்தார். அந்த லைவ்வில் அவர் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அதில்,

“அவ நிறைய தப்பு பண்ணியிருக்கா. ஆனாலும், அவ தப்பான பொண்ணு கிடையாது. அவ தப்பான பொண்ணா இருந்திருந்தா அவளை ரெண்டரை வருஷமா என் வீட்ல வச்சிருக்க மாட்டேன். அவளுக்கு அம்மா மட்டும்தான். ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கா. அவளைப் பார்க்கும்போது என்னை பார்த்த மாதிரியே இருக்கும். அவளுக்குக் கல்யாணம், குழந்தைன்னு செட்டில் ஆகணும்னுதான் ஆசையே! பெரிய நடிகையாகணும்னுலாம் அவ என்னைக்கும் நினைச்சதில்லை.

ஶ்ரீநிதி – நக்‌ஷத்ரா

அவ ஒருவரை விரும்பினாள். நான்தான் அவர் ரொம்ப நல்லவரா இருக்கார்னு ஷூட்ல சொன்னேன். அவ அவரை பார்த்துட்டு, ரெண்டு பேரும் பேசி ஒரு மாசத்துலேயே கல்யாணம் வரைக்கும் முடிவு பண்ணிட்டாங்க. ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் எவ்வளவு தூரம் தெரியும்னுலாம் எனக்குத் தெரியல. அதெல்லாம் அவங்க, அவங்க விருப்பம். நவம்பர் 18 அவளுக்கு நிச்சயதார்த்தம். அவ யாரும் இல்லாத அனாதை கிடையாது. அவளுக்கு நண்பர்கள் நாங்க இருக்கோம், தவிர அம்மா, தங்கச்சின்னு எல்லாரும் இருக்காங்க. எங்க யாருக்குமே அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகுதுன்னு கூட தெரியாது.

சும்மா வீட்டுக்கு கூப்பிட்டு திடீர்னு நிச்சயம் பண்ணிட்டாங்க. அவங்ககிட்ட ‘நீங்க நக்‌ஷத்ராவுடைய தங்கச்சியையாவது கூப்பிட்டிருக்கலாமே’ன்னு சொன்னதுக்கு அந்தப் பையனுடைய அம்மா என்னை அடிக்க வந்துட்டாங்க. உன் ஃப்ரெண்ட்டிற்கு நீ நல்லதுதானே பண்ணனும்னு ரொம்ப ஹர்ட் பண்ணி பேசினாங்க. என் வாழ்க்கையில் நான் ரொம்ப அழுத நாள் அதுதான். என் அக்கா மாதிரிதான் நான் நக்‌ஷத்ராவை நினைச்சேன். ஆனா, அந்ப்த பையனுடைய ஃபேமிலியே டிராமா பண்ணாங்க. நக்‌ஷூகிட்ட நான் பொறாமையில் பேசுறதா சொன்னாங்க. அவளுக்கு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் கூட கிடையாது. அதை நான்தான் கிரியேட் பண்ணிக் கொடுத்தேன். பொறாமைப்படுறவளாக இருந்தா நான் ஏன் அதை பண்ணியிருக்கணும்?

ஶ்ரீநிதி – நக்‌ஷத்ரா

நக்‌ஷத்ரா பசிச்சா கூட வாயைத் திறந்து கேட்க மாட்டா… அவ கேரக்டர் அப்படி! அவளை அந்தப் பையனுடைய குடும்பமே லாக் பண்ணிட்டாங்க. இதுவரை நான் நக்‌ஷத்ராகிட்ட இது பண்ணு, அது பண்ணுன்னு சொன்னதேயில்ல. இந்த விஷயத்தை கூட இதுவரை நான் யார்கிட்டயும் சொல்லலை. என் பிரெண்ட்டோட வாழ்க்கையை என்னால காப்பாற்ற முடியலைன்னு என்னால ஷூட்டிங் கூட போக முடியல. அவளுடைய ஃபோன்ல என்னை பிளாக் பண்ணி வச்சிருக்காங்க.

ஒருமுறை நக்‌ஷூ என்கிட்ட, ‘கல்யாணம் சீக்கிரம் பண்ண சொல்றாங்க… நீ வருவியா’ன்னு கேட்டா. அப்ப கூட, ‘நீ வீடு கட்டிட்டு கல்யாணம் பண்ணு. நான் கண்டிப்பா வரேன்’னு சொன்னேன். அவளுக்குக் கிட்டத்தட்ட 2 லட்சம் சம்பளம். ஆனா, அவ அக்கவுண்ட்ல பத்தாயிரம் கூட இல்ல. இப்பவே இப்படி இருந்தா அவ கல்யாணத்துக்கு பிறகு எப்படி இருப்பா? அவ சந்தோஷமா இருக்கேன்னு சொல்றா… ஆனா, எனக்கு அப்படித் தெரியல. அவங்க அம்மாகிட்டேயே போய் அவங்க பொண்ணை பற்றி கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க. அவங்க அம்மாவும் பொண்ணுக்கு நல்ல லைஃப் கிடைக்கும்னு பொறுத்து போயிட்டு இருக்காங்க.

ஶ்ரீநிதி – நக்‌ஷத்ரா

நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தேன். அப்ப கூட என்னை பார்க்க அவ வரல. நான் இப்ப சொன்ன எல்லாமே உண்மை. சீரியலில் இருக்கிற எல்லாருக்கும் இது தெரியும். நான் கஞ்சா, போதையில் பேசுறன்னு எல்லாம் சொல்றாங்க. எனக்கு கஞ்சா பழக்கமெல்லாம் இல்ல. போதையில் இந்த மாதிரி பேச அவசியமும் இல்ல. மத்தவங்களை பற்றித் தவறா எதுவும் நான் பேச மாட்டேன். இப்ப ஏன் நான் பேசியிருக்கேன்னா… எனக்கு விஜே சித்ரா ஃப்ரெண்ட். ரொம்ப திறமையானவங்க. அவங்க பாய் ஃப்ரெண்ட் செலக்ட் பண்ணப்ப அந்தப் பையன் குறித்து என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பேசினாங்க. என்கிட்ட சித்துவுக்குச் சொல்லி புரியவைன்னு சொன்னாங்க. ஆனா, அவங்ககிட்ட நான் எதுவும் சொல்லலை. டிசம்பர் 8, என் பிறந்தநாள். செலிபிரேட் பண்ணிட்டு தூங்கி எழுந்து பார்க்கும்போது அவ இறந்துட்டான்னு செய்தி வந்துச்சு.

அப்போதிலிருந்து என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பாதுகாப்பான ரிலேஷன்ஷிப்பில் இருக்கணும்னு நினைச்சேன். அதனாலதான் நக்‌ஷத்ராவுக்கு இப்படி நடக்கும்போது என்னால அதை ஏத்துக்க முடியல.

ஶ்ரீநிதி – நக்‌ஷத்ரா

நக்‌ஷூவை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து பேசினேன். அவ என்னை நம்பலை. அந்தப் பையனுடைய குடும்பத்துடைய பெயரை நான் கெடுக்க விரும்பல. அதனாலதான் அவங்க பெயரை இப்ப சொல்லல. அவளை அவங்க அம்மாகூட சேர்த்து வச்சுட்டா போதும். இன்னும் அவங்க அவளை விடலைன்னா நான் போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணுவேன். நக்‌ஷூக்கு ஏதாவது ஆச்சுன்னா அவ சாவுக்கு கூட நான் போக மாட்டேன்!” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.