வானில் உள்ள குறுகிய தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
மேற்கு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போர் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்பட்ட காட்சி, சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.