கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்த கள்ள நோட்டுகளை பதுக்கியதாக, தனிப்பிரிவு சார்பு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்.!

மதுரையில் கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளை பதுக்கியதாக, தனிப்பிரிவு சார்பு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மதுரை புறநகர் குற்றப்புலனாய்வு பிரிவு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்த் என்பவர், கடந்த 2020ம் ஆண்டு வாகன தணிக்கையில் சுமார் 1 கோடி ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தார்.

அதனை முழுமையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் 2 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை ஆனந்த் தனக்கு சொந்தமான இடத்தில் பதுக்கியதாக புகார் எழுந்தது. தனிப்படை போலீசாரின் சோதனையில் கள்ளநோட்டுகள் சிக்கியதை அடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.