கனடாவிலிருந்து குரங்கம்மை அறிகுறிகளுடன் வந்த நபர்: இந்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை


கனடாவிலிருந்து இந்தியா வந்த பயணி ஒருவருக்கு குரங்கம்மையின் அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அவரிடமிருந்து ஆய்வகப் பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வில், அவருக்கு குரங்கம்மைத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

அவர் எந்த விமான நிலையத்தில் வந்திறங்கினார் என்பது முதல் அந்த நபர் குறித்த எந்த விவரங்களும் வெயிடப்படவில்லை.

இதுவரை கனடாவிலிருந்து இந்தியா வந்தவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே குரங்கம்மைக்கான அறிகுறிகளுடன் வந்துள்ள நிலையில், இந்திய அரசு, சமீபத்தில் குரங்கம்மை பாதிப்பு காணப்படும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு, குரங்கம்மை அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் மீது கவனம் செலுத்துமாறும், அவர்களை தனிமைப்படுத்துமாறும் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
 

கனடாவிலிருந்து குரங்கம்மை அறிகுறிகளுடன் வந்த நபர்: இந்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.