விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்து.!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த லாரி மோதியது.

காரியப்பட்டியில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு, ஷேர் ஆட்டோ மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

வழியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவர்களை இறக்கிவிட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர், அருகிலும் மற்றொரு கல்லூரியை நோக்கி புறப்பட்ட போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி, ஆட்டோவின் பின்புறத்தில் மோதியது.

இதில் ஆட்டோவில் பயணித்த 8 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்த நிலையில், லாரி ஓட்டுநர் ஆவியூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.