திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பெருமாளை வழிபட 5 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் 20 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த பக்தர்கள்.!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பெருமாளை வழிபட 5 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் 20 மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் காத்திருந்தனர்.

கோடை விடுமுறை காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் 64 அறைகளும் நிரம்பி வழிந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் காத்திருந்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால் தற்போது ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. வரிசையில் காத்திருப்போருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில்  உணவு, குடிநீர், டீ, காபி மற்றும் பால் வழங்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.