காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 3 மக்களவை தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 23ல் இடைத்தேர்தல் நடைபெறும். ஜூன் 26ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர், அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.