தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' – ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்

‛‛அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு'' போன்ற அழுத்தமான படங்களை கொடுத்த இயக்குனர் தங்கர் பச்சான் புதிதாக 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்ற படத்தை இயக்குகிறார். இதில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தங்கர் பச்சான் முதன்முறையாக ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்துள்ளார். ஜூலை மாதம் 25 முதல் இரு கட்டங்களாக படப்பிடிப்புகள் தொடங்குகின்றன.

தயாரிப்பாளர் வீரசக்தி கூறுகையில், “மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. இக்கதையை கேட்ட மாத்திரத்திலேயே கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அடுத்த நொடியே படத்தை தயாரிக்க முடிவெடுத்துவிட்டேன். இது தங்கர் பச்சானின் அழுத்தமான மற்றொரு படைப்பு. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இது இருக்கும்..” என்கிறார்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் “டக்கு முக்கு டிக்கு தாளம்” திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளுக்கிடையில் இப்புதிய திரைப்படத்தின் பாடல்களை உருவாக்கும் பணிகளை துவக்கியுள்ளார், தங்கர் பச்சான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.