முன்விரோதம் காரணமாக ஊராட்சி செயலரை வெட்டி கொலை செய்த உறவினர்கள்

மதுரை மாவட்டத்தில் ஊராட்சியின் செயலரை முன்விரோதம் காரணமாக அவரது அண்ணன் மகன்களே வெட்டி படுகொலை செய்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடையபட்டி ஊராட்சியின் செயலரான லட்சுமணன் அப்பகுதியில் உள்ள கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாக பூசாரியாகவும் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு கோயில் முதல் மரியாதை செய்யப்பட்டு வந்துள்ளது.

இதனை பிடிக்காத அவரது அண்ணன் மகன்கள் தங்களுக்குதான் கோயில் முதல் மரியாதை தரப்பட வேண்டும் என்று அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது அண்ணன் மகன்கள் இரண்டு பேர் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.