சவுதாலாவுக்கு இன்று தண்டனை அறிவிப்பு| Dinamalar

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அரியானா முதல்வர் ஒம்பிரகாஷ் சவுதாலாவுக்கு தண்டனை விபரம் இன்று வெளியிடுகிறது டில்லி கோர்ட்.

ஹரியானாவில் கடந்த 1993 முதல் 2006 வரை, இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா முதல்வராக பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக 2005ல் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

நேற்று நடந்த விசாரணையில் இவர் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி விகாஷ் துல் அறிவித்தார். இந்நிலையில் தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.