மாயமான பள்ளி மாணவி – காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு

கோபிசெட்டி பாளையம் அடுத்துள்ள நம்பியூர் அருகே உள்ள திருமநாதம்பாளையத்தில் வீட்டில் இருந்து மாயமான பள்ளி மாணவியை காதல் கணவனுடன் மைசூரில் இருந்து காவல்துறையினர் மீட்டு வந்தனர்.
கோபிசெட்டிபாளையம் நம்பியூர் அருகே உள்ள திருமநாதம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து விட்டு தற்போது தேர்வு விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு மாலை வந்து பார்த்த போது வீட்டில் இருந்த மாணவி மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து நம்பியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர், அப்போது அந்த மாணவி மைசூர் அருகே உள்ள மகாதேவபுரா பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் என்பரை காதலித்ததும், அதைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, மைசூர் சென்று காதலனை திருமணம் செய்தது தெரிய வந்தது.
image
அதைத்தொடர்ந்து மாணவியையும், அவரது காதல் கணவர் கார்த்தியையும் மீட்டு வந்த நம்பியூர் காவல்துறையினர், காதல் கணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.