நடிகை அம்ரீன் பட்டை கொலை செய்த 2 தீவிரவாதிகளை 24 மணி நேரத்தில் சுட்டுக்கொன்ற காவல்துறை..!

ஜம்மு காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை அமரீன் பட்டை கொலை செய்த தீவிரவாதிகள் இரண்டு பேர் 24 மணி நேரத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த 3 நாட்களில் நடைபெற்ற பல்வேறு துப்பாக்கிச் சண்டைகளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகையைக் கொலை செய்த தீவிரவாதிகள் அகமது வாஜா மற்றும் அப்ரீன் அப்தாப் மாலிக் ஆகியோரை அவந்திபோராவில் நேற்றிரவு பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் இந்த இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.