நாமக்கல்லில் காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த மருமகன்.!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

கருவேப்பம்பட்டியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணுக்கும், கார்த்தி என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கார்த்திக்கு ஜன்னி வந்ததால் பயந்து போன ஆர்த்தி அங்கிருந்து தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கார்த்தியும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாமியார்  வீட்டின் பின்புறத்திற்கு குடி வந்துள்ளார்.

ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ மாமியார் தடையாக இருப்பதாக எண்ணிய கார்த்தி அவருடன் அடிக்கடி சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

நேற்று மாலையிலும் இந்த பிரச்னை தொடர்பாக கார்த்தி சண்டை போட்ட நிலையில், ஆத்திரத்தில் குழவிக்கல்லால் கோகிலாவை தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.