மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி பாஜகவில் இணைந்தார்.!!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி நேற்று பாஜகவில் இணைந்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலைய மாநில செயலாளராக இருந்தவர் சரத்பாபு. இவர் கட்சித் தலைவர் கமலஹாசனுக்கு கட்சியின் மீது ஆர்வம் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு விலகினார். இதையடுத்து இவர் பாஜகவில் இணைவார் என கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை கிண்டியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னிலையில் சரத்பாபு பாஜகவில் இணைந்தார். அவருக்கு அண்ணாமலை உறுப்பினர் அட்டை வழங்கி வரவேற்றார். 

சரத்பாபு பாஜகவில் இணைவதற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மவுரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், தலைமை நிலைய மாநில செயலாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து சரத்பாபு நீக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.