அரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1999ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த சவுதாலா, வருமானத்திற்கு அதிகமாக 6 கோடி ரூபாய் சொத்து சேர்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ (Rouse Avenue) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவர் குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து, சவுதாலாவிற்கு சிறை தண்டனையுடன், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.