பண மோசடி வழக்கு: பரூக் அப்துல்லாவுக்கு சம்மன்| Dinamalar

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவிற்கு, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகவும், வரும் 31ம் தேதி ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி முறைகேடு தொடர்பான விவகாரத்தில் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சங்கத்தில் பணியாளர்களை நியமித்து, பிசிசிஐ அளித்த நிதியை தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி இருந்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பல முறை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.