பெரு நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம்.!

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரைப்பகுதியில் இருந்து 200 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதே போல், நியூ கலிடோனியா லாயல்டி தீவுகளின் தென்கிழக்கு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், தரைப்பகுதியில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.