எரிபொருள் வரிசையில் காத்திருந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டுள்ளது.
தம்புள்ளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நின்ற பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.
தங்க நகையின் பெறுமதி இலட்சக்கணக்கில்
குறித்த சம்பவம் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளையைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவர் இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த தங்க நகையின் பெறுமதி சுமார் 500,000 ரூபா என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.