உதகை மாவட்ட புத்தாக்க திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

உதகை: உதகை மாவட்ட வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கும் புத்தாக்க திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். மாவட்ட அலுவலர் இமானுவேல் சுயதொழில் செய்யும் ஆதிவாசி குழுக்களிடம் லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.75,000 நிதி உதவித் தொகையில் தலா ரூ.25,000 லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார்.கோத்தகிரியை சேர்ந்த ஆதிவாசி குழுவினர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.