10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த சித்த மருத்துவர் கைது

சென்னை கொடுங்கையூரில் 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த 65 வயதான சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.

போலீசார் விசாரணையில் அதே பகுதியில் சித்தா கிளினிக் நடத்தி வரும் 65 வயதான பாலசுப்பிரமணியம் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்ததை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.