எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனம்

உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் அடுத்த வாரத்தின் மத்தியில் தொடங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக காஸ் சிலிண்டர்களை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

3,500 மெட்ரிக் தொன் கொண்ட இரண்டு கப்பல்களுக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு கப்பல் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வரும் என எதிர்பார்ப்தாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.குறித்த கப்பல்களில்  கொண்டு வரப்படும் எரிவாயுவின் அளவு 7500 மெட்ரிக் டொன்களாகும்.

இதன் பின்னர் எரிவாயு சிலிண்டர் விநியோகததை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது

12.5 கிலோ கிராம், 5 கிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எடையுள்ள சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்றும் லிட்ரோ நிறுவனம் 4வது நாளாக இன்றும் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.