விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி அருகே மொபட்டில் சந்தன மரக்கட்டைகளைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் செல்வகுமார், வெங்கடேசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, புதுச்சேரி மாநிலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி டி.வி.எஸ்., மொபட் ஓட்டி வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர் கொண்டு வந்த பையில் 10 கிலோ அளவில் சந்தன மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அயோத்திபட்டணத்தைச் சேர்ந்த சன்னகிருஷ்ணன், 44; என்பதும், விற்பனைக்காக சந்தன மரக்கட்டைகளைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.போலீசார், சன்னகிருஷ்ணனை கைது செய்து, சந்தன மரக்கட்டைகளையும் , மொபட்டையும் பறிமுதல் செய்து விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி அருகே மொபட்டில் சந்தன மரக்கட்டைகளைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி சோதனைச் சாவடியில் நேற்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.