உத்தர கன்னடா : ஐ.என்.எஸ்., கந்தேரி நீர்மூழ்கி கப்பலில் முதல் முறையாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்து, கடலோர பாதுகாப்பை ஆய்வு செய்தார். இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கர்நாடகா வந்துள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று முன்தினம் கார்வாரில் உள்ள கதம்பா கடற்படை தளத்துக்கு வந்தார்.சுதந்திர இந்தியாவின், 75வது ஆண்டு விழாவை ஒட்டி, நேற்று காலை சூரியோதயத்தின் போது, காமத் கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து யோகா பயிற்சி செய்தார்.
பின், 2019ல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட, ஐ.என்.எஸ்., கந்தேரி நீர்மூழ்கி கப்பலில் பயணித்து, அரபி கடலில் கடலோர பாதுகாப்பை ஆய்வு செய்தார். கடலுக்கு அடியில் ஒரு மணி நேரம் பயணித்து, அதிநவீன வசதிகள் கொண்ட நீர்மூழ்கி கப்பலின் போர் திறன் குறித்து வீரர்களிடம் தகவல் பெற்றார்.”நீர்மூழ்கி கப்பல் பயணத்தில், அற்புதமான, சிலிர்ப்பான அனுபவம் கிடைத்தது,” என அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
உத்தர கன்னடா : ஐ.என்.எஸ்., கந்தேரி நீர்மூழ்கி கப்பலில் முதல் முறையாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்து, கடலோர பாதுகாப்பை ஆய்வு செய்தார். இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கர்நாடகா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.