ஜீ.எல். பீரிஸைச் சந்தித்த பிரித்தானியத் தூதுவர்


இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்ட்டன் , வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல் .பீரிஸை சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு வௌ்ளிக்கிழமை கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள வௌிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றுள்ளது

இதன் ​போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை வெற்றிகொள்வதற்கு பிரிட்டனின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது இலங்கைக்கு உதவக் கூடி வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இலங்கையினுள் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து இங்கிலாந்து அரசு கவனம் செலுத்தியிருப்பதாகவும் தூதுவர் சாரா ஹல்ட்டன் உறுதியளித்துள்ளார்.

ஜீ.எல். பீரிஸைச் சந்தித்த பிரித்தானியத் தூதுவர்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.