திருநெல்வேலி மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக அ.ம.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை.!

திருநெல்வேலி மாவட்டத்தில் நில தகராறு காரணமாக அ.ம.மு.க நிர்வாகி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்குளம் ஒன்றிய அமமுக நிர்வாகி சுப்ரமணி. இவர் பாளையங்கோட்டையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவர் வழக்கம் போல் இரவு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்த நிலையில் முதல்கட்ட விசாரணையில் நில தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.