டில்லியில் நினைவுச் சின்னம் இடமாற்றம்| Dinamalar

புதுடில்லி: தலைநகர் டில்லியில் இந்தியா கேட் அருகே இருந்த ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் ஹெல்மெட் நினைவுச் சின்னங்கள் தேசிய போர் நினைவிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

டில்லியில் இந்தியா கேட்டில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் தேசிய போர் நினைவிடம் 2019ல் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியா கேட் அருகே இருந்த ‘அமர்ஜவான் ஜோதி’ கடந்த ஜனவரியில் தேசிய போர் நினைவிடத்துக்கு மாற்றப்பட்டது.

இதேபோல், ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் ஹெல்மெட் நினைவுச் சின்னம் ஆகியவையும் நேற்று தேசிய போர் நினைவிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.