குற்ற வழக்குகளில் முன்ஜாமீன் கோரியவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

குற்ற வழக்குகளில் முன்ஜாமீன் கோரியவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அடிதடி, சீட்டு மோசடி, குட்கா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி பி.வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, முன்ஜாமீன் கோரிய குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர் என்ற காவல்துறையின் அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

காவல்துறையின் அனுமதி இன்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.