இந்தோனேஷியாவில் 43 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 26 பேர் மாயம்..

இந்தோனேஷியாவில் 43 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 26 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

சுலாவேசி மாகாணத்தின் தலைநகரான மகஸ்ஸரில் உள்ள பாடெரே துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட படகில் எரிபொருள் தீர்ந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

அடுத்த நாள் படகு செல்லவேண்டிய இலக்கை அடையாததால் படகை தேடும் பணி நடைபெற்றது. 17 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பெணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.